Powered By Blogger

Thevanayagam Thevananth

Thursday, February 2, 2012

இதயம் மீள நினைந்து பூரிக்கிறது




அக்கினிப் பெருமூச்சு நாடகப் பட்டறிவுக் குறிப்பு

1998ம் ஆண்டு தொடக்கம் 2002ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்த இராணுவ சிவில் நிர்வாகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்ததான விடயமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எழுந்த நாடகங்கள் காணப்பட்டன. நாடகத் தயாரிப்புக்கள் பற்றியும் நாடகத் தயாரிப்பில்
ஈடுபடுவோர் பற்றியும் அறிவதற்கான பெரும் முயற்சிகள் இராணுவத்தரப்பால் எடுக்கப்பட்டன. யதார்த்த உண்மைகளை நாடகத்தினூடு பேசியதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் அடிக்கடி அச்சுறுத்தப்பட்டது. இருப்பினும் பல்கலைக்கழக மாணவர்களின் தற்துணிவினால் பல்வேறு நாடகங்கள் தொடர்ந்து பல்கலைக்கழகம் என்னும் பாதுகாப்பு வெளிக்குள் மேடையேற்றப்பட்டன. இந்த வகையில் 2000ம் ஆண்டு ஐனவரி மாதம் பல்கலைக்கழக மாணவர்களால் மேடையேற்றப்பட்ட தமிழர் காணமற்போதல் தொடர்பான பிரச்சினைகளைப் பேசிய அக்கினி பெருமூச்சு நாடகத்தைக் குறிப்பிட முடியும். அநீதிக்கெதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற தற்துணிவோடு செயற்ப்பட்ட முப்பது இளைஞர் யுவதிகளோடு இணைந்து வேலை செய்த அனுபவம் பூரிப்பானது. இந்த நாடகத்தின் எழுத்துருவாக்கம், நெறியாழ்கை பொறுப்பை நான் ஏற்று நிறைவேற்றியிருந்தேன். அந்த மேலான அனுபத்தை பகி;ர்ந்து கொள்ள விளைகிறேன்.

Friday, January 6, 2012

நாங்கள் விழிப்பாக இருக்கிறோமா.............



தே.தேவானந்த்,
பணிப்பாளர்,ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கல்வியறிவுடையவர் அல்லது படித்தவர் என்பது என்பது ஒருவர் எழுத வாசிக்கத் தெரிநதிருத்தல் என்பதை குறித்தது.ஆனால் இன்று படித்தவர் என்பதன் அர்த்தம் சற்று வித்தியாசமானதாகும்.அதாவது எழுத வாசிக்கத் தெரிந்திருப்பதோடு வௌ;வேறு வகையான ஊடகங்களை வெற்றிகரமாக கையாள்வதற்கும்,புரிந்து கொள்வதற்கும் வியாக்கியானிப்பதற்கும் தெரிந்திருத்தல் என்பதைக ;குறிக்கிறது.

நிறையத் தகவல்கள் வெவவேறு ஊடகங்கள் ஊடாக எமக்கு கிடைக்கின்றன.அவற்றிக்கிடையில் நிறைய முரண்பாடுகளும் வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

இன்று எமது வாழ்வென்று எதை நாம் கருதுகின்றோம் எமது நாளாந்த பழக்கங்களும் வழக்கங்களும் யாரால் சொல்லித்தரப்படுகின்றன?எதை நாம் மெய்யென்றும் யதார்த்தமென்றும் கருதுகின்றோம்?என்று சிந்தித்தோமானால் எமக்கு கிடைக்கின்ற பதில் மீடியா’ அதாவது ஊடகம்.முன்பெல்லாம் நாம் பத்திரிகையை மட்டுமே ஊடகமாக கருதிவந்திருக்கிறோம்.இதனாலேயே இதழியல்துறை, பத்திரிகைத்துறை என்று அழைக்கின்ற வழக்கத்தைக் கொண்டிருந்தோம்.ஆனால் இன்று அதிகளவில் ஊடகம் என்ற சொல்லை அல்லது பல்லூடகம் என்ற சொல்லைப்பயன்படுத்துகின்றோம்.

‘இன்று ஊடகங்கள் எதை யதார்த்தமென்று அடையாளப்படுத்துகின்றனவோ அல்லது உணர்த்துகின்றனவோ அதுவே இன்று எமது யதார்த்தமாகவும் கருதப்படுகின்றது.ஊடகத்தில் வருவதில் எந்தத்தவறும் இருக்காது.அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது அதை அப்படியே நம்பி எமது வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அதற்கேற்ப செயற்பட வெண்டுமென்ற எண்ணம் எம் அறிவு சார்ந்த தளத்தையும் தாண்டி மேலோங்கியிருக்கிறது என்பதை மறுக்கமுடியவில்லை.’

Tuesday, May 24, 2011

தமிழ் திரைப்பட வரலாறு


எஸ். தியடோர் பாஸ்கரன்



இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில நிமிடங்களே ஓடக்கூடிய துண்டு, சலனப்படங்களே அன்று திரையிடப்பட்டன. இது நடந்த இடம் போட்டோப்பன் கட்டிடத்திற்கு அடுத்திருக்கும் விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில்தான். சினிமாஸ்கோப் என்று விளம்பரப்பட்டிருந்த அந்த காட்சி, ஒரு மாபெரும் கலாச்சார தாக்கத்தின் ஆரம்பமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பல சலனப்படக் காட்சிகள் சென்னை போட்டோன் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. இக்காட்சிகளுக்கு நாளடைவில் ஆதரவு கூடியது. இதைத் தொடர்ந்து 1900இத்தில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு, அன்றைய மௌன்ட் ரோடில் வார்விக் மேஜர் என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் எலக்ட்ரிக் தியேட்டர். மின் விளக்கு மூலம் ஒளியெறியப்படும் வசதியுடன் இருந்ததால் இந்த அரங்கிற்கு அந்தப் பெயர்.

1905இல் திருச்சி இரயில்வேயில் டிராப்ட்ஸ் மேனாக வேலைப் பார்த்து வந்த சுவாமிக்கண்ணு வின்சென்ட், எடிசன் சினிமாட்டோகிராப் எனும் திரைப்படம் காட்டும் நிறுவனத்தை துவக்கினார். தென்னிந்தியாவின் முதல் போட்டோங் டாக்கீஸ் இதுவே. பல ஊர்களுக்குச் சென்று இயேசுவின் வாழ்க்கை போன்ற குறும்படங்களைத் திரையிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயம்புத்தூரில் ரெயின்போ டாக்கீஸை கட்டி, வள்ளி திருமணம் போன்ற படங்களைத் தயாரிக்கவும் செய்தார். 1914இல் சென்னையில் வெங்கையா என்பவரால் கட்டப்பட்ட கெயிட்டியே, இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கு (இது இன்றளவும் செயல்பட்டு வருகிறது). இதையடுத்து சில நிரந்தர திரையரங்குகள் கட்டப்பட்டன.

கதைப் படங்கள் வெளிவர ஆரம்பித்த பின், திரைப்படக் காட்சிகளுக்கு வரவேற்பு கூடியது. ஆனால் இங்கு திரையிடப்பட்ட படங்கள் பெரும்பாலும் மேலை நாட்டில் தயாரிக்கப்பட்ட கதைப்படங்களே. 1912 ஆம் ஆண்டிற்கு பின் மும்பையில் தயாரான ஹரிஷ் சந்திரா போன்ற புராணப் படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இப்படங்கள் பெற்ற வரவேற்பைக் கண்ட மோட்டார் உதிரிப் பாகங்கள் விற்பனையாளர் நடராஜ முதலியார் கீழ்பாக்கத்தில், இந்தியா பிலிம் கம்பெனி என்பதை நிறுவி, 1916இல் கீசக வதம் என்ற மௌனப் படத்தைத் தயாரித்தார். தென்னிந்தியாவின் முதல் திரைப்படம் இதுதான்.

Tuesday, January 12, 2010


Snow in Denmark-2010