Powered By Blogger

Thursday, February 2, 2012

இதயம் மீள நினைந்து பூரிக்கிறது




அக்கினிப் பெருமூச்சு நாடகப் பட்டறிவுக் குறிப்பு

1998ம் ஆண்டு தொடக்கம் 2002ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்டு வந்த இராணுவ சிவில் நிர்வாகத்தின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்ததான விடயமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் எழுந்த நாடகங்கள் காணப்பட்டன. நாடகத் தயாரிப்புக்கள் பற்றியும் நாடகத் தயாரிப்பில்
ஈடுபடுவோர் பற்றியும் அறிவதற்கான பெரும் முயற்சிகள் இராணுவத்தரப்பால் எடுக்கப்பட்டன. யதார்த்த உண்மைகளை நாடகத்தினூடு பேசியதற்காக பல்கலைக்கழக நிர்வாகம் அடிக்கடி அச்சுறுத்தப்பட்டது. இருப்பினும் பல்கலைக்கழக மாணவர்களின் தற்துணிவினால் பல்வேறு நாடகங்கள் தொடர்ந்து பல்கலைக்கழகம் என்னும் பாதுகாப்பு வெளிக்குள் மேடையேற்றப்பட்டன. இந்த வகையில் 2000ம் ஆண்டு ஐனவரி மாதம் பல்கலைக்கழக மாணவர்களால் மேடையேற்றப்பட்ட தமிழர் காணமற்போதல் தொடர்பான பிரச்சினைகளைப் பேசிய அக்கினி பெருமூச்சு நாடகத்தைக் குறிப்பிட முடியும். அநீதிக்கெதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற தற்துணிவோடு செயற்ப்பட்ட முப்பது இளைஞர் யுவதிகளோடு இணைந்து வேலை செய்த அனுபவம் பூரிப்பானது. இந்த நாடகத்தின் எழுத்துருவாக்கம், நெறியாழ்கை பொறுப்பை நான் ஏற்று நிறைவேற்றியிருந்தேன். அந்த மேலான அனுபத்தை பகி;ர்ந்து கொள்ள விளைகிறேன்.